News March 27, 2025

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 25-ஆம் தேதி அன்று மாலை வீட்டிலிருந்து மின் மோட்டாரை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை இளவரசு மார்ச் 26-ம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 26, 2025

கள்ளக்குறிச்சி: GPAY வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News December 26, 2025

கள்ளக்குறிச்சி மக்களே.. இந்த APP முக்கியம்! CLICK NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மத்திய, மாநில அரசுகள் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இனி அவைகளைப் பற்றி தெரிய, விண்ணப்பிக்க நீங்கள் அலைய வேண்டாம். <>My scheme <<>>எனும் செயலியை உங்கள் போனில் உடனே டவுன்லோட் பண்ணுங்க. உங்கள் அடிப்படை விவரங்களை அதில் தந்தால், உங்களுக்கான அரசு திட்டங்களின் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறையை அதுவே காண்பிக்கும். உடனே SHARE!

News December 26, 2025

திமுகவின் நான்காண்டு திட்டங்கள் – MLA பெருமிதம்!

image

கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி, உளுந்துார்பேட்டை தோல் இல்லா காலணி தொழிற்சாலை பணிகள், அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளின் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இன்று தமிழகம் முதல்வர் வருகை புரிகிறார். திமுகவின் நான்காண்டு திட்டங்கள் குறித்து உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!