News March 27, 2025

IPLன் உச்சம் தொட்ட 2025 சீசன்! இவ்வளோ ரெக்கார்ட்ஸா!

image

இதுவரை IPL தொடர்களின் முதல் 5 போட்டிகள் முடிவில், இந்த சீசனில் தான் 6 முறை 200+ ஸ்கோர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், 2008, 2023ல் தலா 3 முறை மட்டுமே 200+ ஸ்கோர்கள் அடிக்கப்பட்டன. அதேபோல, அதிக பவுண்டரிகள் 183 முறையும் (முன்னர் 2021ல் 164), அதிக சிக்ஸர்கள் 119 முறையும் (முன்னர் 2023ல் 88) அடிக்கப்பட்டு விட்டன. எந்த அணி முதலில் 300 ரன்களை எட்டும் என்று நீங்க நினைக்கிறீங்க?

Similar News

News April 1, 2025

நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு கனமழை

image

கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News April 1, 2025

ரேஷன் கார்டு ‘KYC’ ஏப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு

image

ரேஷன் கார்டில் ‘<<15929022>>KYC<<>>’ மேற்கொள்ள நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், தற்போது ஏப்.30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரேஷன் மோசடிகள் அதிகமாக நடப்பதால் பொதுமக்களை KYC மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டு தகுதியான மக்களுக்கு மட்டும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் விளக்கம் அளித்துள்ளது. உடனே உங்கள் ரேஷன் கார்டுக்கு விரல் பதிவை செய்யுங்க..

News April 1, 2025

உச்சத்தை தொட்ட யுபிஐ பரிவர்த்தனை

image

நாட்டில் பெரும்பாலானோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், யுபிஐ மூலம் மார்ச் மாதத்தில் ₹24.77 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டதாக NPCI தெரிவித்துள்ளது. இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். சராசரி பரிவர்த்தனை மதிப்பும் ஒரு நாளைக்கு ₹79,903 கோடியாக உயர்ந்துள்ளது, இது பிப்ரவரி மாதத்தை விட 1.9% அதிகமாகும். பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் 25% அதிகரித்துள்ளது.

error: Content is protected !!