News March 27, 2025

போன்களால் ₹250 கோடி பணம் கண்டுபிடிப்பு: நிர்மலா

image

சமூக வலைதளங்கள், மொபைல் போன்களில் ஆய்வு செய்ததன் மூலம் கணக்கில் வராத ₹250 கோடியை கண்டறிய முடிந்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எனவே டிஜிட்டல் தரவுகளை ஆராய்வது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம், வரி செலுத்துவோரின் இமெயில், சமூக வலைதளங்களை ஆராய அதிகாரிகளுக்கு உரிமை வழங்கும் புதிய வருமான வரி மசோதாவிற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவர் இப்படி பேசியிருக்கிறார்.

Similar News

News April 1, 2025

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் ராஜினாமா

image

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி கேப்டன் பிராத்வெய்ட் ராஜினாமா செய்துள்ளார். வெஸ்ட் இண்டீசில் ஆஸி. அணி விரைவில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் புதிய தலைமைக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் தலைமையில் ஆஸி.யில் 27 ஆண்டுகளுக்கு பிறகும், பாக்.கில் 37 ஆண்டுகளுக்கு பிறகும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைத்தது.

News April 1, 2025

தொடரும் ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! மீண்டும் ஒப்பந்தம்

image

BCCI ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் மீண்டும் இணைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை என்ற காரணத்திற்காக இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ்க்கு மீண்டும் ஒப்பந்தத்தில் இணைகிறார். ₹7 கோடி சம்பளமான A+ பிரிவில் ரோகித், விராத், பும்ரா தொடர்வார்கள் என தெரிகிறது.

News April 1, 2025

அமித்ஷா சொன்னது காமெடி: திருமாவளவன்

image

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என அமித்ஷா கூறியது நகைச்சுவை என திருமாவளவன் விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணியால் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது என்பது அமித்ஷாவிற்கே தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் காலம் இன்னும் கனியவில்லை எனவும் திராவிடக் கட்சிகள் பலவீனமடையும்போது அதற்கான கோரிக்கை வலுக்கும் என்றும் திருமா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!