News March 27, 2025

சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

image

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 27, 2025

‘நீங்களும் CM தான்’.. விஜய்யின் தாய் ஷோபா சூசகம்

image

‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலை விஜய்யின் தாயார் ஷோபா பாடியபோது சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. அந்த பாடலில் வரும் ‘ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா, நாளைக்கு நீங்களும் CM தான்’ என்ற வரிகளை அவர் பாடினார். அப்போது, அங்கிருந்த விஜய் சிரிப்புடன் ஒரு ரியாக்சன் கொடுத்தார். SM-ல் பரவி வரும் இந்த வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் ஹார்ட்டினை பறக்கவிட்டு வருகின்றனர்.

News December 27, 2025

செல்போனில் இதை மாற்றினால் 3 ஆண்டு ஜெயில்

image

செல்போன்களில் 15 இலக்க IMEI நம்பர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை (அ) ₹50 லட்சம் அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது தொடர்பாக செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை மையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த விவகாரத்தில் உஷாராக இருங்கள்.

News December 27, 2025

பேரிடர்களால் ₹10.77 லட்சம் கோடி இழப்பு

image

2025-ல் இயற்கை பேரிடர்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. வெப்ப அலைகள், காட்டுத் தீ, வெள்ளம் ஆகியவையால் ₹10.77 லட்சம் கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டதாக, காப்பீடு செய்யப்பட்ட இழப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இந்த துயரங்களுக்கு, புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டால் ஏற்படும் காலநிலை மாற்றமே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கலிபோர்னியா காட்டுத் தீயால் மட்டும் ₹5.38 லட்சம் கோடி இழப்பு.

error: Content is protected !!