News March 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Similar News
News November 6, 2025
பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தினால் என்ன ஆகும்?

பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தக்கூடாது. தாய் அருந்தும் மது ரத்தத்தின் வழியாக பாலில் கலக்குமாம். அந்த பாலை குழந்தைகள் அருந்தும்போது, அவர்கள் உடலிலும் மது கலக்கிறது. குழந்தைகளின் கல்லீரல் மிகவும் மென்மையானது என்பதால், மதுவை அவர்களது உடலால் சுத்திகரிக்க முடியாது. இதனால் குழந்தைகளில் மூளை வளர்ச்சி, கல்லீரல் செயல்பாடு பாதிக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE பண்ணுங்க.
News November 6, 2025
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி போராட்டம்

சமூகத்தை சீரழிக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளதாக கூறி, அதனை தடை செய்ய வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் பலமுறை வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி, வரும் 9-ம் தேதி தனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் இல்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 6, 2025
CM பதவியை குறிவைக்கும் லாட்டரி சார்லஸ் மகன்

லாட்டரி மார்ட்டின் மகனும் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனருமான சார்லஸ், புதுவையில் JCM மக்கள் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். CM பதவியை குறிவைத்து காய்நகர்த்தி வரும் அவருக்கு, 15 MLA-க்களின் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் தனிக்கட்சியும் தொடங்கவுள்ளாராம். சார்லஸுக்கு பக்க பலமாக பாஜக இருப்பதாக கூறப்படும் நிலையில், NDA கூட்டணியில் தொடர வேண்டுமா என CM ரங்கசாமி யோசனையில் இருக்கிறாராம்.


