News March 27, 2025

பெண் பெண் மருத்துவர் தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி கண்டுபிடிப்பு

image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் பயிற்சி பெண் மருத்துவர் தாக்கப்பட்ட வழக்கில், மருத்துவர் தெரிவித்த அங்க அடையாளங்களை வைத்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்ததில், சிவகங்கை அருகே ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் இதில் குற்றவாளி என நகர் போலீசார் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 20, 2025

சிவகங்கை மக்களே இனி அலைச்சல் இல்லை

image

சிவகங்கை மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!

News October 20, 2025

சிங்கம்புணரி அருகே ரூ.1.60 லட்சம் வழிப்பறி

image

மதுரைரை சேர்ந்த ஓட்டுநர் தங்கபாண்டி. இவர் கடலை மிட்டாய் கம்பெனி வேனில் வசூலுக்கு சென்று, மதுரை நோக்கி சென்றார். எஸ்.எஸ்., கோட்டை அருகே டூவீலரில் வந்த மர்ம நபர்கள், வேன் கதவு திறந்து இருப்பதாக கூறினர். இதை நம்பி, வேன் டிரைவரும், உதவியாளரும் இறங்கி பார்த்தனர். அப்போது வண்டியில் இருந்த ரூ.1.60 லடசத்தை வழிப்பறி செய்து தப்பினர். எஸ்.எஸ்., கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 20, 2025

காரைக்குடி மக்கள் கவனத்திற்கு

image

சென்னையிலிருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10:30 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையம் வந்து சேரும். பயணிகளை பல இடங்களுக்கு ஏற்றி செல்வதற்காக 3 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரண்டு பஸ்கள்கள் இயக்கப்பட நிலையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தற்சமயம் 3 பஸ்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடி ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!