News March 26, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (26.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 1, 2025
கோவை நிலுவை வரியை வசூலிக்க கமிட்டி

கோவை மாநகராட்சியில் சொத்து வரி ₹129.43 கோடி உட்பட மொத்தமாக பல்வேறு வரிகளில் ₹667.77 கோடி இன்னும் வசூலிக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலுவை வரியினங்களை ஆய்வு செய்வதற்கும், வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்து வசூலிப்பதற்கு சிறப்பு கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
News April 1, 2025
1 மாதத்தில் 28 பேர் மீது குண்டாஸ்

கோவை சிட்டி போலீஸ் கமிஷனராக சரவணசுந்தா் பொறுப்பேற்ற பிறகு குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாநகரில் ரௌடிகளை ஏ பிளஸ், ஏ, பி என 3 வகைகளாக பிரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 28 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் சரவணசுந்தர் நேற்று தெரிவித்தார்.
News April 1, 2025
கோவை மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

கோவை எஸ்.பி கார்த்திகேயன் நேற்று செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது புகார் அளிக்க 94981-81212, 7708-100100 எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.