News March 26, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News December 25, 2025
திரைக்கதை மன்னனை கெளரவிக்கிறாரா ரஜினி?

திரைக்கதை மன்னனாக போற்றப்படும் இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட பாக்யராஜ், ஜன.7-ல் 72 வயதை தொடவுள்ளார். அன்றைய தினம் சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இணைந்து ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் நடித்துள்ளனர். உங்களுக்கு பாக்யராஜின் திரைக்கதையில் பிடித்த படம் எது?
News December 25, 2025
திருமண தடையை நீக்கும் வியாழக்கிழமை விரதம்!

தேவர்களுக்கே ஆசானான குருபகவானை வியாழக்கிழமை விரதமிருந்து வழிபட்டால் அளப்பரிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தலைக்கு குளித்து மஞ்சள் நிற ஆடை அணிந்து, உணவு சாப்பிடாமல் கோயிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் உள்ள குரு பகவானுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமப்பூ கலந்த பால் கொண்டு அபிஷேகம் செய்யவும். இதனால் திருமண தடை நீங்கும், தொழில் மற்றும் வியாபாரம் சிறந்து செல்வம் பெருகும் என கூறப்படுகிறது.
News December 25, 2025
விஜய்யிடம் போனில் பேசிய ராகுல் காந்தி

கரூர் துயரம் நடந்தபிறகு விஜய் மீது கொலைப்பழி சுமத்த சிலர் திட்டமிட்டனர். அப்போது விஜய்க்கு முதல் call வந்ததே ராகுல் காந்தியிடம் இருந்துதான் என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். ‘Brother, I am always with you’ என ராகுல், விஜய்யிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, காங்., நிர்வாகிகள் தவெகவினருடன் இணக்கம் காட்டுவது திமுக தலைமைக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது பேசுபொருளாகியுள்ளது.


