News March 26, 2025
நாயகன் மீண்டும் வர்றார்.. இந்தியா வரும் மெஸ்ஸி!

ஃபுட்பால் லெஜண்ட் மெஸ்ஸி வரும் அக்டோபரில் இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொச்சியில் நடைபெறும் 2 ஃப்ரண்ட்லி போட்டிகளில் அர்ஜெண்டினா அணியினருடன் மெஸ்ஸி விளையாட இருக்கிறார். இந்தியாவில் ஃபுட்பாலை பிரபலப்படுத்தும் நோக்கில், இந்த போட்டிகள் நடைபெறும் என அர்ஜெண்டினாவின் ஸ்பான்சரான HSBC தெரிவித்துள்ளது. மெஸ்ஸி கடைசியாக கடந்த 2011ல் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடினார்.
Similar News
News January 19, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 585 ▶குறள்: கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று ▶பொருள்: ஒரு உளவாளி என்பவன், மற்றவர்களின் மனதில் எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தாத தோற்றத்துடன், சந்தேகப்பட்டு பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், தனது நோக்கத்தை ஒருபோதும் வெளிப்படுத்தாதவனாகவும் இருப்பான்.
News January 19, 2026
‘அமைதி வாரியத்தில்’ சேர இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு!

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். காசாவில் நிர்வாகம் மற்றும் மறுகட்டமைப்பை மேற்பார்வையிட அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது. தனித்தனியான 11 உறுப்பினர்களை கொண்ட காசா நிர்வாக வாரியத்தின் தலைவராக டிரம்ப் இருப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மறுபுறம், அமைதி வாரியத்தில் சேர டிரம்பிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
News January 19, 2026
சச்சின் சாதனையை முறியடித்த கோலி

அதிக இடங்களில் சதமடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 35 வெவ்வேறு மைதானங்களில் சதமடித்து, சச்சினின் சாதனையை (34) முறியடித்துள்ளார். ரோஹித்(26), பாண்டிங்(21) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். இதேபோல், நியூசிலாந்துக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். கோலிக்கு(10) அடுத்தபடியாக காலிஸ்(9), ஜோ ரூட்(9), சச்சின்(9) ஆகியோர் உள்ளனர்.


