News March 26, 2025
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை… கோர்ட் அதிரடி தீர்ப்பு

வரதட்சணை கொடுமையால் இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ? உ.பி.-யில் கர்ப்பிணியாக இருந்த சுமிதா என்பவரை, வரதட்சணை கேட்டு அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகிய மூவரும் சித்ரவதை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் சுமிதாவின் கழுத்தை நெரித்து அந்த கொலை செய்துள்ளனர். பெண்ணின் தந்தை தொடுத்த வழக்கில், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News April 1, 2025
தமிழர்களை பார்த்து கற்க வேண்டும்: ராஜ் தாக்கரே

தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழர்களை பார்த்து மராட்டியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என நவ நிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஹிந்தி திணிப்பை தமிழர்கள் வலிமையாக எதிர்ப்பதாகவும், ஆனால், மராட்டியர்கள் தங்கள் மொழி குறித்த கவலையே இல்லாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு மாநில மொழியும் மதிக்கப்பட வேண்டியவை எனவும் தெரிவித்துள்ளார்.
News April 1, 2025
ஏப்ரல் 01: வரலாற்றில் இன்று

*1935 – இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. *1957 – இந்தியாவில் 1 நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. * இலங்கை இனக்கலவரம், 1958: கொழும்பு நகரில் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் மீது தார் பூசப்பட்டன. *1976 – ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது. *2004 – கூகிள் நிறுவனம் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது. *முட்டாள்கள் தினம்.
News April 1, 2025
ரஷ்யாவிற்கு ஆயுத டெக்னாலஜி வழங்கிய இந்தியா?

இந்திய பொதுத்துறை நிறுவனமான HAL, ரஷ்யாவிற்கு தடைசெய்யப்பட்ட ஆயுத தொழில்நுட்பத்தை வழங்கியதாக அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இது உண்மைக்கு புறம்பான செய்தி எனவும், சில அரசியல் நோக்கங்களுக்காக தவறாக வழிநடத்த இந்த செய்தி புனையப்பட்டுள்ளதாகவும் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. மேலும், உண்மையை ஆராய்ந்து செய்தி வெளியிடவும் அறிவுறுத்தியுள்ளது.