News March 26, 2025

மதுரையில் செருப்பே அணியாத விசித்திர கிராமம்

image

மதுரை அருகே உள்ள அந்தமான் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஊருக்குள் செருப்பு அணிவது இல்லை. 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை உள்ளதாகவும் இதற்கு காரணம் கருப்பசாமி மீது உள்ள பக்திதான் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊர் எல்லைக்குள் வரும்போதும் செருப்பை கையில் எடுத்துச் செல்கின்றனர். இதனை மீறினால் சாமி பலி வாங்கிவிடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. *புது தகவல்னா பகிரவும்*

Similar News

News December 4, 2025

BREAKING திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தாமதம்.!

image

திருப்பரங்குன்றத்தில் இரவு 7மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை தீபம் ஏற்றப்படவில்லை. தீபம் ஏற்றுவதற்காக அங்கு திரண்டுள்ள இந்து முன்னணி மற்றும் பாஜகவினரை அனுமதிக்காமல், கலைந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் தீபம் ஏற்றப்படுமா.? இல்லையா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இரவு 10:30க்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 4, 2025

BIG BREAKING: சற்று நேரத்தில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம்!

image

திருப்பரங்குன்றம் தீபத்தூணில தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபத்தூணில் விளக்கேற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது சற்று நேரத்தில் தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்பட உள்ளது.

News December 4, 2025

BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

image

திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை காவல் ஆணையர் ஆஜராகி விளக்கமளித்த நிலையில், மனுதாரர் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். தீபம் ஏற்றும் மனுதாரர் தரப்புக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல் ஆணையர் லோகநாதனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளளார். திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!