News March 26, 2025
ராணிப்பேட்டை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

வாலாஜாவை அடுத்த கத்தாரி குப்பம் கிராம பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தேவதாஸ் (70). இவர் அம்மூர் ரோடு தென்றல் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த பைக் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாலாஜா போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இது பற்றி மேலும் விசாரணை நடைபெறுகிறது.
Similar News
News November 12, 2025
சமூக நல துறையின் செயல்பாடுகள் ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.12) தேதி சமூக நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்டம் முழுவதும் சமூக நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், நிலுவை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் சமூக நலன் அலுவலர் பால சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News November 12, 2025
ராணிப்பேட்டை: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News November 12, 2025
ராணிப்பேட்டை: சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 12 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீரர்கள் தேர்வு முகாமில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 1-9-2013 தேதி அல்லது அதற்கு மேல் இருக்கவேண்டும் அதன்படி வரும் 15ஆம் தேதி மாவட்ட அணி தேர்வு முகாம் காலை 8 மணியளவில் ராணிப்பேட்டை இஐடி பேரி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது.


