News March 26, 2025

கோவை: 3 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்

image

காவல் நிலைய பதிவேடுகள் முறையாக பராமரிப்பு, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை, குற்றங்களை கண்டறிதல், தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி கிழக்கு, பொள்ளாச்சி தாலுக்கா, மகாலிங்கபுரம் காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ 9001 : 2015 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கியூசிஐ விருதையும் பெற்றுள்ளன. இவற்றிற்காக டிஎஸ்பி, போலீசார் உள்ளிட்டோரை எஸ்பி கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

Similar News

News March 31, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 31) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News March 31, 2025

மருதமலை சிறப்பு தெரியுமா?

image

கோவையின் அடையாளமாக திகழும் மருதமலை முருகன் கோயில், முதலில் கொங்கு சோளர்களால் நிர்மாணிக்கப்பட்டது. விஜய நகர, கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இத்திருத்தலம் உருவானது. மருதாசலம், மருதவரையான், மருதைய்யன் என்ற பெயர்களில், 9ஆம் நூற்றாண்டிலேயே மக்களிடம் இக்கோயில் அறியப்பட்டிருந்தது. பாம்பாட்டி சித்தர், இங்கு சில காலம் வசித்தாராம். தீமைகளை போக்கும் சர்வ வள்ளமை, மருதமலை முருகனுக்கு உள்ளதாம்.

News March 31, 2025

கோவையில் 7 பேருக்கு தொழுநோய் சிகிச்சை துவக்கம்

image

கோவையில் தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சூலூர் மற்றும் ஆனைமலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிதாக 7 பேருக்கு தொழுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழுநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் 223 குழுக்கள் மூலம் 4.95 லட்சம் பேருக்கு ஆய்வு நடத்தப்பட்டது. இதுவரை 100 நாட்களாக ஆய்வு பணிகள் நடைபெற்றுள்ளன.

error: Content is protected !!