News March 26, 2025
திருப்பணியில் ஊழலா? பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்செந்தூரில் பக்தர்களுக்காக கட்டப்பட்ட கழிவறை தரமற்றதாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. கோயில் பணியில் ஊழல் நடந்துள்ளதாக அண்ணாமலையும் சாடியிருந்தார். இந்நிலையில் வழக்கறிஞர் ராமநாத ஆதித்தன் என்பவர் RTI மூலம் பெற்ற தகவலில் ₹300 கோடி செலவில் நடக்கும் கோயில் திருப்பணிக்கு, வரைபடம் தயாரிக்க மட்டும் Pvt நிறுவனத்திற்கு ₹8 கோடி வழங்கியது தெரியவந்துள்ளது. இந்த தகவலால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News April 2, 2025
சொந்த மண்ணில் திணறும் RCB

குஜராத் அணிக்கு எதிரான IPL போட்டியில் RCB அணி 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற GT அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய RCBயின் துவக்க வீரர் கோலி 7 ரன்களில் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி, RCB 6.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்துள்ளது.
News April 2, 2025
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்.. சட்டம் சொல்வதென்ன?

தீவிரவாத செயல்களில் ஈடுபடுதல் அல்லது அதற்கான முயற்சியில் இருப்போருக்கு அடைக்கலம் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 113ஆவது பிரிவின் 6ஆவது உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், அந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
News April 2, 2025
பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்…!

சூரிய பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகும்போது சித்திரை மாதம் (ஏப்.14) பிறக்கிறது. அதன்படி, விசுவாசுவ புத்தாண்டு தொடங்கியதும், 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறதாம். *ரிஷபம் – நிதிநிலை மேம்படும், வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். *துலாம் – எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு. *மீனம் – பழைய முதலீட்டில் லாபம் கிடைக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.