News March 26, 2025
துக்க வீட்டில் கோஷம் எதற்கு..?

ஒரு பிரபலம் மரணமடைந்து விட்டால், அன்று அவர்கள் வீட்டில் கூட்டம் அலைமோதும். அஞ்சலி செலுத்த வருகிறார்களோ, இல்லையோ, வரும் மற்ற பிரபலங்களைக் காணவே கூட்டம் குவிகிறது. இதில், யாராவது வந்தால், கூச்சலிட்டு கோஷமும் எழுப்புவார்கள். அங்கே வேதனையில் தவிப்பவரின் நிலை, கொஞ்சம் கூட உணர முடியாதா. அவர்களும் மனிதர்கள் தானே. இனியாவது கொஞ்சம் கண்ணியம் காப்போமே. துக்க வீட்டில், ரசிகர்களின் கோஷமும் எதற்கு?
Similar News
News October 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 501 ▶குறள்: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.▶பொருள்: அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.
News October 27, 2025
உலகிலேயே விலை உயர்ந்த உணவுகள்!

ஹோட்டலுக்கு செல்லும் போது உணவின் விலை சற்று அதிகமாக இருந்தால், மீண்டும் அங்கு செல்வதற்கு யோசிப்போம். ஆனால், மேலே உள்ள உணவுகளின் விலையை பார்த்தால், இவ்வளவு காசு கொடுத்து வாங்கி சாப்பிடுகிறார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழும். புகைப்படங்களை SWIPE செய்து பார்ப்பதுடன், நீங்கள் சாப்பிட்ட விலை உயர்ந்த உணவின் பெயரை கமெண்ட் பண்ணுங்க..
News October 27, 2025
மீண்டும் இணைகிறதா பாஸ் கூட்டணி?

‘நீயெல்லாம் நல்லா வரணும்டா’ என்று நட்புக்கான கலக்கல் காம்போவாக சினிமாவில் ஜொலித்தவர்களில் ஆர்யா – சந்தானமும் உண்டு. பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, சேட்டை என இந்த கூட்டணிக்கென்று தனி ரசிகர்களே உள்ளனர். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 கதைகளை இருவருமே கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ஜாய் தான்!


