News March 26, 2025
கோவை: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

கோவையில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News August 14, 2025
கோவை மாநகராட்சியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (14.08.2025) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ள இடங்கள் குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 1.கிழக்கு மண்டலம் வார்டு எண் 5, இடம் -பங்காரு திருமண மண்டபம், 2.மேற்கு மேற்கு மண்டலம் (வார்டு எண் 17 & 33) இடம் -சுஹிதா மஹால் திருமண மண்டபம், டி.வி.எஸ் நகர் கவுண்டம்பாளையம்.
News August 13, 2025
17 வயது பள்ளி மாணவி கர்ப்பம்: கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

கோவை: காரமடைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இங்கு அவரது உறவினரான 17 வயது மாணவனும் படித்து வருகிறார். இந்தநிலையில் இருவரும் நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி 6 மாத கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 13, 2025
கோவையில் பாலியல் தொழில்: இருவர் கைது

கோவை மாநகர் பகுதியில் தொடர் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநக காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் இன்று பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ராம் நகரில் உள்ள பிரகாஷ் லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குணசீலன் (51). உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி (34). ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.