News March 26, 2025

29 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு

image

ரேஷன் கடைகள் வரும் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) வழக்கம்போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறையாகும். வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறும். இதனால் 29ஆம் தேதி பொருட்கள் வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்த நிலையில், ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

Similar News

News November 13, 2025

யாருடன் கூட்டணி? தவெக அறிவிப்பு

image

திமுக, பாஜகவை தவிர, தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என தவெக அறிவித்துள்ளது. இதற்கிடையே CONG கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், சமீபத்தில் விஜய்யை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இம்மாத இறுதியில் தவெக நிர்வாகிகள் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக – CONG கூட்டணி அமைந்தால், மாற்றுத்திட்டங்களுக்கு திமுக தயாராகி வருகிறதாம்.

News November 13, 2025

வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு டெண்டர்: எல்.முருகன்

image

தூய்மை பணியாளர்கள் பெயரில் பணம் பறிக்க திமுக அரசு முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். முதலில் தூய்மை பணியாளர்களின் பணிகளை வேண்டப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு திமுக அரசு தாரைவார்த்த நிலையில், தற்போது அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியையும் வழங்க டெண்டர் கோரி இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

News November 13, 2025

பாலியல் வன்கொடுமை மோசடி.. பெற்றோர்களே உஷார்

image

பெற்றோரை குறிவைத்து புது சைபர் மோசடி தற்போது நடந்து வருவதாக போலீசார் எச்சரிக்கின்றனர். பள்ளி, கல்லூரிக்கு மகன்கள் சென்று இருக்கும் வேளையில் பெற்றோர்களுக்கு போன் செய்து, உங்கள் மகன் தன்னுடன் படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டான். அவனை கைது செய்துள்ளோம் என மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் சைபர் குற்றவாளிகள் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!