News March 26, 2025
தனி அடையாள எண் பெற 28,974 விவசாயிகள் பதிவு

தேனி மாவட்டத்தில் 50,189 விவசாயிகள் உள்ளனர். அவர்களில் தாலுகா வாரியாக தேனி 2,839, ஆண்டிபட்டி 6,904, பெரியகுளம் 5,496, போடி 4,577, உத்தமபாளையத்தில் 9,158 என மொத்தம் 28,974 விவசாயிகள் தனி அடையாள எண் வழங்குவதற்காக நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் பதிவு செய்துள்ளனர். மார்ச்.31 க்குள் மீதமுள்ள விவசாயிகள் சிறப்பு முகாம்களில் பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News March 31, 2025
தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் 31.03.2025 10 மணி- 6 மணி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News March 31, 2025
தேனி : ஆயிரம் லிங்கங்கள் ஒரே இடத்தில் சங்கமம்

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கீ.மீ தொலைவில் உள்ளது சுருளிமலை கோடி லிங்கேஷ்வர் ஆலயம். இந்தக் கோயிலில் ஆயிரக்காணக்கான லிங்கங்கள் உள்ளது. இந்த லிங்கங்கள் அனைத்தும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பிரதிஷ்டை செய்யப்பட்டவை ஆகும். இங்கு வழிபட்டால் கடன் பிரச்சனை நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனையில் இருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
News March 31, 2025
தேனி :கிணற்றில் மிதந்த பெண் சடலம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் முனியாண்டி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே உள்ள கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவரின் உடல் மிதந்தது. அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.