News March 26, 2025
விடுமுறையில் மாணவர்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர்சித்திக் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கோடை காலம் தொடங்கி கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கோடை விடுமுறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அருகே உள்ள குளம் குட்டை ஆறுகள் ஏரி, கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்லாதவாறு பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
ராணிப்பேட்டை:இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.
News August 9, 2025
ராணிப்பேட்டை: ரயிலை கடக்க முயன்ற போது மரணம்

பாணாவரம் பகுதியை சேர்ந்த ஒப்பந்த பணியாளரான ராஜேந்திரன் 51 நேற்று ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அரக்கோணம் வந்தபோது, ரயில் நிலைய தண்டவாளத்தை கடக்க முயன்று தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இருந்து விட்டதாக தெரிவித்தனர். அரக்கோணம் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
News August 9, 2025
ராணிப்பேட்டை: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் TRAINEE பணிக்கு 100 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதிக்குள் <