News March 26, 2025
சர்ச்சைக்குரிய தீர்ப்பு: மேல் விசாரணைக்கு எடுத்த SC

பெண்ணின் மார்பைப் பிடிப்பதோ, ஆடையை கிழிப்பதோ பாலியல் வன்கொடுமை அல்ல என சிறார் பாலியல் தாக்குதல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
Similar News
News October 15, 2025
‘இட்லி கடை’ படம் மனதிற்கு நெருக்கமானது: அண்ணாமலை

இளைஞர்களின் வாழ்க்கையில், மனதிற்கும், பணத்திற்கும் இடையேயான ஒரு போராட்டம் குறித்து தனுஷ், ‘இட்லி கடை’ படத்தில் தைரியமாக உடைத்து பேசியுள்ளதாக அண்ணாமலை பாராட்டியுள்ளார். ரிஷப் ஷெட்டியை போல எழுத்து, இயக்கம், நடிப்பு என 3 துறைகளிலும் சிறப்பான படைப்பை கொடுத்துள்ளதாகவும் புகழ்ந்துள்ளார். இப்படத்தில் கிராம தெய்வங்களும், வழிபாடுகளும் மனதிற்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
News October 15, 2025
வதந்தி பரவியதால் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்: CM

கரூர் சம்பவத்துக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன் என எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதாலேயே அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்ததாக CM பதிலளித்துள்ளார். MGR,ஜெயலலிதா ஆகியோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அதிகாரிகள் தானே பேட்டி அளித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: IMF கணிப்பு

ஐநா சபையின் நிதி பிரிவு அமைப்பாக செயல்பட்டு வரும் IMF, இந்தியாவின் நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.6%-ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. இது ஏற்கெனவே கணிக்கப்பட்ட 6.4%-ல் இருந்து 0.2% அதிகமாகும். இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு உள்பட பல்வேறு சவால்கள் உள்ளபோதும், இந்திய பொருளாதாரம் வலிமையாக உள்ளதாக IMF தெரிவித்துள்ளது.