News March 26, 2025
சென்னையில் ஓராண்டுக்குள் 4ஆவது என்கவுன்டர்!

சென்னை போலீஸ் கமிஷனராக கடந்தாண்டு ஜூலையில் பொறுப்பேற்ற அருண் ஐபிஎஸ், ஓராண்டுக்குள் 4ஆவது என்கவுன்டரை நடத்தியுள்ளார். ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, ராஜா ஆகியோர் வரிசையில், நள்ளிரவில் செயின் பறிப்பு கொள்ளையன் <<15888455>>ஜாபர் குலாம் ஹூசைன்<<>> என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். இதனை பலர் வரவேற்ற நிலையில், கமிஷனர் அருணை சிலர் விமர்சித்தும் வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 29, 2025
அன்று வங்கதேசம்; இன்று நேபாளம்?

நேபாளத்தில் கடந்த 2 நாட்களாக நடந்துவரும் வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 100-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடுத்த வாக்குறுதிகளை ஆளுங்கட்சி நிறைவேற்றவில்லை என்பதால் மீண்டும் மன்னராட்சி வேண்டுமென்று எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் வங்கதேசத்தில் நடந்த ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அந்நிய சக்திகள் இருந்தன. இதிலும் அப்படி இருக்குமோ?
News March 29, 2025
குஜராத் அணி முதலில் பேட்டிங்…!

ஹர்திக் பாண்டியா தலைமையிலான MI அணியும், கில் தலைமையிலான GT அணியும் அகமதாபாத் மைதானத்தில் சற்றுநேரத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் வெற்றிக் கணக்கைத் தொடங்கவில்லை. இதனால், இந்த போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும். இதுவரை 5 போட்டிகளில் நேருக்குநேர் மோதி, GT 3 முறையும் MI 2 முறையும் வென்றுள்ளன. இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பாங்க?
News March 29, 2025
தமன்னாவுக்கு பிரேக்கப்? காதலனின் சுவாரஸ்ய பதில்

தமன்னாவுக்கும் அவரது காதலன் விஜய் வர்மாவுக்கும் பிரேக்கப் ஆனதாக சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் ரிலேஷன்ஷிப் குறித்து சுவாரஸ்யமான பதிலை வர்மா அளித்துள்ளார். ஐஸ்கிரீமை சுவைப்பது போல் ரிலேஷன்ஷிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் சில நேரம் இனிக்கும், சில சமயம் உப்பாக இருக்கும் என கூறியுள்ளார். எதுவானாலும் அனுபவித்து கடந்து செல்ல வேண்டும் என வர்மா கூறியுள்ளார்.