News March 26, 2025

மெகுல் சோக்‌ஷியை நாடு கடத்த இந்தியா முயற்சி!

image

பஞ்சாப் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி, பெல்ஜியத்தில் தஞ்சமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை பெல்ஜியம் அரசுடன் இணைந்து இந்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே வழக்கில் தேடப்பட்டு வரும் அவரது உறவினரான நிரவ் மோடியும் விரைவில் லண்டனில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.

Similar News

News March 29, 2025

இன்னும் 2 நாள்கள் மட்டுமே… உடனே செய்யுங்கள்

image

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க e-KYC செய்வதற்கு மார்ச் 31 தான் கடைசி நாளாகும். இதை செய்யத் தவறினால், ரேஷனில் பொருள்கள் வாங்க முடியாமல் போகும். உங்கள் ரேஷன் கார்டு டி-ஆக்டிவேட் செய்யப்படலாம் (அ) ரத்து செய்யப்படலாம். ஆகவே, இதுவரை ஆதார் எண் இணைக்காதவர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று செய்யலாம். இ-சேவை மையங்கள் அல்லது வீட்டிலிருந்தே இணையம் மூலமாக ஆன்லைனிலும் e-KYC அப்டேட் செய்யலாம்.

News March 29, 2025

ஆன்லைனில் e-KYC செய்யும் வழிமுறை

image

*மாநில ரேஷன் கார்டு போர்ட்டலில் (https://www.tnpds.gov.in/) லாக்-இன் செய்யவும். *உங்கள் ரேஷன் கார்டு எண், பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழையவும். *e-KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். “Aadhaar Linking” (அ) “e-KYC Update”-ஐ கிளிக் செய்து விவரங்களை அளிக்கவும். *அதன்பின் வரும் OTP-ஐ உள்ளிட்டு, போட்டோ, ஆவணங்களை அப்லோட் செய்து e-KYC-ஐ சமர்ப்பிக்கவும். வெற்றிகரமாக Submit செய்தபின் உங்களுக்கு மெசேஜ் வரும்.

News March 29, 2025

இதுதான் மிக வேகமான அரைசதம்

image

முதல் ஒருநாள் போட்டியிலேயே மிக வேகமாக அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையை நியூசிலாந்தின் முகமது அபாஸ் பெற்றிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில், அவர் 24 பந்துகளில் அரைசதம் கடந்தார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவரான முகமது அபாசுக்கு வெறும் 21 வயதுதான் ஆகிறது. முன்னதாக, இந்தியாவின் க்ருனால் பாண்டியா (26 பந்துகள்) இந்த சாதனையை தன்வசம் கொண்டிருந்தார்.

error: Content is protected !!