News March 26, 2025
கோர விபத்தில் கவிழந்த ஆட்டோ

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூங்கிலான் (30), ரேவதி(27) தம்பதி. இவர்களது ஒரு வயது மகள் தன்விகா. மூங்கிலான் திண்டிவனத்திலிருந்து ஆட்டோவில் சாரம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் வந்த குழந்தை உட்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 13, 2025
விழுப்புரம்: ரேஷன் கார்டில் திருத்தமா? உடனே அணுகுங்கள்!

விழுப்புரத்தில், பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் இன்று (டிசம்பர்-13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய குடும்பஅட்டை விண்ணப்பித்தல்,பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரிமாற்றம், நகல் அட்டை, செல்போன் எண் பதிவுமாற்றம் & குறைபாடுகள் தொடர்பான மனுக்கள் பெறப்படும். ஷேர்!
News December 13, 2025
விழுப்புரம்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <
News December 13, 2025
விழுப்புரம்: பண்ணை அமைக்க விருப்பமா? ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


