News March 26, 2025

இளம் பெண் விபரீத முடிவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அந்தியூரை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பிரேமா, 30. இந்த தம்பதியினருக்கு இடையே, அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த, 24ம் தேதி காலை மீண்டும் ஏற்பட்ட பிரச்னையால், மனமுடைந்த பிரேமா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News March 31, 2025

கள்ளக்குறிச்சி: இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி, நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் 18-35 வயது வரையுள்ள வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி அளித்து தொழில் வாய்ப்பிற்கு தகுதியானவர்களாக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் வேலை வாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ என்ற இணையதளத்தின் மூலம் சேரலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 31, 2025

கல்வராயன்மலை: 17 வயது சிறுமி தற்கொலை

image

கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலையில் உள்ள தேக்குமரத்துவளவை சேர்ந்த முத்தழகு (17) வயது சிறுமி. இவரை அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை (28). இவர் முத்தழகியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் முத்தழகு இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் தங்கதுரை தற்சமயம் பேசவில்லை என தெரியவருகிறது. இதனால் மனவேதனையில் முத்தழகு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கரியாலூர் போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.

News March 31, 2025

கள்ளக்குறிச்சி: பொது மக்களுக்கு கலெக்டர் அறிவுரை 

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை வெயிலில் பொதுமக்கள் கவனமாக இருக்க கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தி உள்ளார்.கோடைவெயில் கால துவக்கத்திலேயே வெப்ப அளவு அதிகம் உள்ளது. இதில் இருந்து தற்காத்து கொள்ள, உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ், எலுமிச்சை சாறு, இளநீர், வீட்டில் தயாரித்த நீர் மோர், லஸ்ஸி மற்றும் பழச்சாறுகளை பருக வேண்டுமென தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!