News March 26, 2025
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

கடலூர் விருத்தாசலம் ஏ.ஆர்.எஸ்.மஹால் அருகே உள்ள ஏ.கே.டி. நீட் பயிற்சி மையங்களில், 100% கட்டண சலுகையில் சேர்க்கை பெறுவதற்கான திறனறி தேர்வு இன்று (மார்ச்.26) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் நீட் மறுதேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள், தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இத்தேர்வு எழுத 6369146590, 9361165429 ஆகிய எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும்.
Similar News
News March 14, 2026
கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News March 14, 2026
‘அடிமை கூட்டணி’: கடலூர் அமைச்சர் அறிக்கை

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசையும், அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
News March 14, 2026
குடிமைப் பணிகள் தேர்வு -2 ,ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 15.03.2026 அன்று நடைபெறவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்
தெரிவித்துள்ளார். தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் இந்த தேர்வில் காலையில் 315 பேரும், மாலையில் 322 பேரும் எழுத உள்ளனர்.
ஹால் டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.


