News March 26, 2025

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

image

கடலூர் விருத்தாசலம் ஏ.ஆர்.எஸ்.மஹால் அருகே உள்ள ஏ.கே.டி. நீட் பயிற்சி மையங்களில், 100% கட்டண சலுகையில் சேர்க்கை பெறுவதற்கான திறனறி தேர்வு இன்று (மார்ச்.26) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் நீட் மறுதேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள், தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இத்தேர்வு எழுத 6369146590, 9361165429 ஆகிய எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும்.

Similar News

News January 12, 2026

கடலூர்: மனித கறி கேட்டு ஓட்டலில் ரகளை

image

கடலூர், பொன்னேரியில் தினேஷ் (26) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அங்கு 7 வாலிபர்கள் சாப்பிட வந்தனர். மது போதையில் இருந்த அவர்களிடம் ஓட்டல் ஊழியர், சாப்பிட என்ன வேண்டும் என கேட்டார். அதற்கு அவர்கள் மனித கறி வேண்டும் என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், கவியரசன் (24), பிரசாந்த் (19), ஸ்ரீகாந்த் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.

News January 12, 2026

கடலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில், ஏரிகளின் மீன்பிடி உரிமையினை குத்தகைக்கு விட ஏதுவாக, மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன என, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள 30 ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக 21.1.2026 முதல் https://www.tntenders.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 12, 2026

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.12) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!