News March 26, 2025

கொள்ளையன் என்கவுண்டரில் உயிழப்பு

image

சென்னையில் 7 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்தனர். கொள்ளையடித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாபர் மற்றும் சூரஜ் ஆகியோரை போலீசார் விமான நிலையத்தில் கைது செய்தனர். நகைகளை பறிமுதல் செய்வதற்காக தரமணி காவல் நிலையம் அழைத்து செல்லும்போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜாபர் சுட முயன்றுள்ளார். அப்போது, தற்காப்புக்காக போலீசார் அவரை என்கவுண்டர் செய்தனர்.

Similar News

News August 11, 2025

சென்னையில் நாளை மின்தடை (1/2)

image

சென்னையில் நாளை (ஆக.12) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள். கோடம்பாக்கம், டிரஸ்ட் புரம், ஆற்காடு சாலை பவர் ஹவுஸ் முதல் ரயில்வே டிராக் வரை, இன்பராஜபுரம், பஜனை கோயில் தெரு, வரதராஜப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் நகர் முழுப் பகுதி, ரங்கராஜபுரம் பகுதி, சூளைமேடு, துரைசாமி சாலை, சுப்புராயன் தெரு, காமராஜர் காலனி 1 முதல் 8வது தெரு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. (<<17372710>>தொடர்ச்சி<<>>)

News August 11, 2025

சென்னையில் நாளை மின்தடை (2/2)

image

பெருங்குடி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செக்ரடேரியட் காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்க காலனி, அம்பத்தூர் தொழிற்பேட்டை: தெற்கு கட்டம், முகப்பேர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை I, 2வது பிரதான சாலை, தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, கல்யாணி எஸ்டேட் பகுதியில் மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளது.

News August 11, 2025

தெரு நாய்களுக்கு 2 தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

image

சென்னை மாநகராட்சி சார்பில், தெரு நாய்களுக்கு ஆன்டி-ரேபிஸ் மற்றும் ஒட்டுண்ணி மருந்து என 2 வகை தடுப்பூசிகள் செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கால்நடை மருத்துவ குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கு சென்று, நாய்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கோடு, நேற்று (ஆகஸ்ட் 10) முதல் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!