News March 26, 2025

பெண் கொலை வழக்கு- எலெக்ட்ரீசியனுக்கு 5 ஆண்டு சிறை!

image

சேலம் அடுத்த வீராணம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த அமுதா (36) சாக்கடை கால்வாயில் குப்பைகளைக் கொட்டியுள்ளார். இது தொடர்பான தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் சிவக்குமார் அமுதாவை தாக்கியுள்ளார். இது படுகாயமடைந்த அமுதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் எலெக்ட்ரீசியனுக்கு ரூபாய் 2,000 அபராதமும், 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

Similar News

News March 29, 2025

கிராம மக்கள் ஏற்பாடு செய்த விருந்தில் ஆட்சியர் பங்கேற்பு

image

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீராணம் கிராம ஊராட்சி தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக 2024-25 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டதையொட்டி, இன்று (மார்ச் 29) நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் வீராணம் கிராம பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, பங்கேற்றார்.

News March 29, 2025

மாற்றுத்திறனாளியிடம் பண மோசடி செய்த பெண் கைது

image

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அரவிந்த்சாமியிடம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பெயரைப் பயன்படுத்தி, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த வித்யா ராஜ் என்ற இளம்பெண், பண மோசடி செய்துள்ளார். மாற்றுத்திறனாளி அளித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 29, 2025

திருமண வரம் அருளும் தாரமங்கலம் கோவில்!

image

சேலம்: தாராமங்கலத்தில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் சிற்ப கலைக்கு புகழ்பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் வியப்புக்குரியவை. இத்தலத்திலேயே சிறப்பான சன்னதி பாதாள லிங்கம் சன்னதியாகும். இந்த லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம், தொழில் விருத்தி கை கூடும் என்பது நம்பிக்கை.

error: Content is protected !!