News March 26, 2025
எப்போது தேர்தல் நடந்தாலும் மோடியே பிரதமர்: ஓபிஎஸ்

இந்திய நாட்டின் புகழை பிரதமர் மோடி உலக அளவில் கொண்டு சென்றுள்ளதாக ஓபிஎஸ் பாராட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது ஆட்சி திறன் காரணமாக இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எடுத்து சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எத்தனை முறை தேர்தல் வந்தாலும், பிரதமராக மோடியே வருவார் என்றும் தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Similar News
News March 30, 2025
நாளை விடுமுறை இல்லை.. எல்ஐசி ப்ரீமியம் கட்டலாம்

இன்று (மார்ச் 30) ஞாயிறு விடுமுறை தினம். அதேபோல், நாளை (மார்ச் 31) ரமலான் பொது விடுமுறை. ஆனால் நிதி ஆண்டு நிறைவையொட்டி, இன்றும், நாளையும் நாடு முழுவதும் எல்ஐசி கிளை அலுவலகங்கள் திறந்திருக்கும் என்றும், ஆதலால் இன்றும், நாளையும் வாடிக்கையாளர்கள் எந்த சிரமமும் இன்றி எல்ஐசி அலுவலகங்களில் ப்ரீமியம் கட்டலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
News March 30, 2025
பழைய ஸ்டார்க் தெரியுமா? வீரனுக்கு சாவே இல்லை..

ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் தன் வேகத்தாலும், ஸ்விங் பவுலிங்காலும் எதிர் அணியை மிரள வைப்பதில் வல்லவர். காயம், பார்ம் அவுட் போன்ற காரணங்களால் சமீப காலமாக ஸ்டார்க் பழையபடி விளையாடவில்லை. ஆனால் இன்றைய IPL ஆட்டத்தில் ஸ்டார்க்கை பழைய வெறியுடன் காண முடிந்தது. SRHக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தான் யார் என்பதை மீண்டும் உலகறிய செய்தார். பர்ப்பிள் கேப்பையும் வென்றார்.
News March 30, 2025
அடுத்த 2 நாள்களுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் இன்று தொடங்கி மூன்று நாள்களுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 30 – யுகாதி, மார்ச் 31 – ரம்ஜான், ஏப்ரல் 1 – கணக்கு முடிப்பு என மூன்று நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் பலர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இந்த தொடர் விடுமுறையில் நீங்கள் என்ன திட்டமிட்டுள்ளீர்கள் என கமெண்ட்டில் சொல்லுங்க.