News March 26, 2025
மார்ச் 27 முதல் 3 நாட்கள் வெயில் உச்சம் தொடும்

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News November 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 7, ஐப்பசி 21 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.450 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 09:00 AM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை
News November 7, 2025
கார்த்திகாவுக்கு ₹1 லட்சம் வழங்கிய லோகேஷ் கனகராஜ்

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகா தங்க பதக்கம் வென்றார். எளிய பின்னணியில் இருந்து வந்து சாதனை படைத்த அவருக்கு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கினார்.
News November 7, 2025
பாக். தளபதிக்கு அதிக அதிகாரம்

பாகிஸ்தானை ஆள்வது PM ஷெபாஸ் ஷெரீப் அல்ல, ராணுவ தளபதி அசிம் முனீர் தான் என்று எதிர்கட்சித் தலைவர் இம்ரான்கான் நேற்று குற்றம்சாட்டினார். இதை உறுதிப்படுத்தும் விதமாக தளபதி முனீருக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் அந்நாட்டு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய ஆளுங்கட்சித் தயாராகி வருகிறது. ஏற்கெனவே அரசியலில் ராணுவ தலையீடு அதிகமாக உள்ள நிலையில், இந்த திருத்தத்தால் ராணுவத்தின் கை மேலும் ஓங்கும்.


