News March 26, 2025
உருவம் தவிர்; உள்ளத்தை பார்

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.
Similar News
News October 25, 2025
நவம்பர் 4: பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என மாணவர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நவ.4-ம் தேதி பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிடவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு தேர்தல் நடைபெற இருப்பதை கருத்தில்கொண்டு தேர்வுகளை முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அவர் அறிவிக்க உள்ளார்.
News October 25, 2025
இந்தியா Vs பாக்.: எல்லையில் இரு ராணுவங்களும் பயிற்சி

பாக்., எல்லை அருகே சர் கிரீக் பகுதியில் வரும் 30-ம் தேதி முதல் நவ.10 வரை முப்படைகள் பயிற்சி நடத்த உள்ளன. சர் கிரீக் பகுதியில் பாக்., ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்துவதாக கூறப்படும் நிலையில், இந்தியா பயிற்சி மேற்கொள்ள உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக வரும் 28, 29-ம் தேதிகளில் பாக்., தனது வான்வெளியில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அந்நாடு பயிற்சி (அ) ஆயுத சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 25, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

புயல் உருவாவதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மருந்து பொருள்களை கையிருப்பில் வைக்க அனைத்து மாவட்ட ஹாஸ்பிடல்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பாரசிட்டமால், குளுக்கோஸ், உப்பு கரைசல் உள்ளிட்டவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


