News March 25, 2025
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: தேதி அறிவிப்பு

கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று நிறைவடைந்தது. மொத்தம் 8.21 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில், இந்த பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 5இல் வெளியாகவுள்ளது.
Similar News
News March 29, 2025
BREAKING: செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்!

அதிமுக மூத்தத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ளார். எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், செங்கோட்டையனின் இந்த டெல்லி பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 29, 2025
வாட்ஸ்அப் ஸ்டோரியில் பாடலை வைப்பது எப்படி?

வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் சினிமா பாடல்களுடன் ஸ்டோரியை பதிவிட்டு வைப் செய்ய புதிய அப்டேட் வந்துள்ளது. முன்பு புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் வைக்கும் வசதிகள் இருந்த நிலையில், அதனுடன் பாடலை ஸ்டேட்டசில் வைக்கும் வசதியும் இணைந்துள்ளது. ஸ்டேட்டஸ் வைக்கும் இடத்தில் மியூசிக் Icon ஒன்று புதிதாக ஸ்கிரீனில் தெரியும், அதை க்ளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை, படங்களுடன் இணைத்து வைத்துக்கொள்ளலாம்.
News March 29, 2025
சனி அமாவாசையில் செய்யக்கூடாதவை

ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகம் உகந்ததாக திகழும். அந்த நாள்களில், அந்த கிரகங்களுக்கு எதிர்மறையாக இருக்கும் செயல்களை செய்யக்கூடாது. அப்படி சனி அமாவாசையில் சில செயல்களைச் செய்யக்கூடாது *எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது *கருப்பு நிற ஆடை அணியக்கூடாது *வாக்குவாதங்களில் ஈடுபடுவதை குறைக்கவும் *கெட்ட வார்த்தை பேசக்கூடாது *திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்களை மேற்கொள்ளக்கூடாது.