News March 25, 2025
மனிதத்தன்மையற்ற செயல்: டாஸ்மாக்

டாஸ்மாக்கில் ED ரெய்டு நடந்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ED சோதனையின் போது நாங்கள் நடத்தப்பட்ட விதம் மனிதத்தன்மையற்ற செயல் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும், ED அதிகாரிகள் தங்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்ததாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 28, 2025
மியான்மர், தாய்லாந்துக்கு இந்தியா உதவிக்கரம்

மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடு, உடைமைகளை இழந்தவர்களுக்கு PM மோடி ஆறுதல் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் தேவையான உதவிகளையும் இந்தியா செய்யத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாட்டு வெளியுறவு அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகளைத் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 28, 2025
சபாநாயகரை கைநீட்டி பேசுவது மரபு அல்ல: ஸ்டாலின் காட்டம்

மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை வழக்கு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்க இபிஸ் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து அதிமுகவினர் <<15912276>>அமளியில் <<>>ஈடுபட, சபாநாயகரை நோக்கி கைநீட்டி பேசுவது மரபல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
News March 28, 2025
சர்வதேச அங்கீகாரம் பெற்ற படம்.. இந்தியாவில் தடை

கடந்த ஆண்டு வெளிநாடுகளில் வெளியான சந்தோஷ் என்ற படம் ஆஸ்கர் விருந்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. பிரிட்டிஷ் – இந்திய திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கி இப்படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை இப்படம் பேசுகிறது. சில காட்சிகளை நீக்க படக்குழு மறுத்ததால் தடை விதிக்கப்பட்டது.