News March 25, 2025

நெல்லையில் போலீஸ் தடை உத்தரவு அறிவிப்பு

image

திருநெல்வேலி மாநகர பகுதியில் மாநகர காவல் துறை சார்பில் தடை உத்தரவு 15 தினங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று 24 ஆம் தேதி முதல் வருகிற 7ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த உத்தரவின் படி பொது இடங்களில் முன் அனுமதியின்றி கூடுவது, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா நடத்த அனுமதி கிடையாது என மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளார்.

Similar News

News August 26, 2025

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்

image

▶️இன்று காலை 10.30 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
▶️மேலப்பாளையம் மண்டலம் 54 வது வார்டு பகுதியில் புதிய சாலை அமைக்கும் இடையே அப்துல் வஹாப் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார்.
▶️காலை 8 15 மணிக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா பாளையங்கோட்டை செவன் டாலர் பள்ளியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது.

News August 26, 2025

நெல்லை சீமையின் 100 ஆண்டுகள் பழமையான புகைப்படங்கள்

image

100 ஆண்டுகளுக்கு முந்தைய நெல்லை சீமை என்பது, தற்போதைய நெல்லை, தென்காசி, நாகர்கோவில் பகுதிகளை உள்ளடக்கியது. இந்த புகைப்படங்கள் 1925 ஆண்டு முதல் எடுக்கப்பட்டவை என கண்டறியப்பட்டவை. இன்று சுற்றுலா தலமாக வலம் வரும் பல இடங்களை அன்று, கூட்ட நெரிசலில் சிக்காமல் தப்பியன. இந்த புகைப்படங்களில் நெல்லை பேருந்து நிலையம், குற்றாலம், நெல்லையப்பர் கோவில் மற்றும் தெரு, திருவள்ளுவர் பாலம் உள்ளன. *ஷேர் பண்ணுங்க

News August 25, 2025

எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எரிவாயு பதிவு செய்தல் உள்ளிட்ட குறைகளை நுகர்வோர் நேரில் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!