News March 25, 2025

தேனி : இதை மட்டும் சொல்ல வேண்டாம் 

image

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள்  தங்களது செல்போனில் வரும் OTPஐ யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் எனவும், தற்போது OTP குற்றங்கள் பெருகி வருவதால்  OTP மூலம் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட வாய்ப்பு உள்ளது எனவும் மாவட்ட காவல்துறை  தெரிவித்துள்ளது. வங்கி , இணையவழி  குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 29, 2025

போடியில் 2000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்

image

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான போடி கைலாய கீழ சொக்கநாதர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாதந்தோறும் வரும் அம்மாவாசை பௌர்ணமிகளில் இக்கோயிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். இக்கோயில் 2000 ஆண்டுகள் தொன்மையானது. ஐந்து தலை நாகம் ஒன்று கோயிலை பாதுகாத்து வருவதாகவும் ஐதீகம்.

News March 29, 2025

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி

image

தேனி பழனிசெட்டிபட்டி ஆசிரியர் காலனி ஆனந்தரூபன் 32. டிப்ளமோ இன்ஜினியர். இவர் எஸ்.பி.,சிவபிரசாத்திடம்அளித்த புகாரில், ‘தேனியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் நிறுவன மேலாளர் குமார். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் ரூ.8.20 லட்சம் வாங்கினார். ஓராண்டு ஆன பின்பும் அனுப்பவில்லை.கொடுத்த பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றினார் இது போல் நால்வரிடம் ரூ.22.85 லட்சம் மோசடி செய்துள்ளார்.

News March 29, 2025

தேனி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 28.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!