News March 25, 2025
ரோஹித், பாண்டியா எதிர்ப்பு.. ஆனாலும் அசராத தோனி!

ஐபிஎல்லில் Impact Player விதி முதலில் அமல் செய்யப்பட்ட போது, அது தேவையில்லாதது என நினைத்ததாக தோனி தெரிவித்துள்ளார். ஆனால் அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பேட்ஸ்மென்கள் ஆக்ரோஷமாக விளையாட இந்த விதி ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படிதான் டி20 ஃபார்மெட் கிரிக்கெட் மேம்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ரோஹித், பாண்டியா இந்த விதியினை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 30, 2025
BREAKING: இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.28 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஏற்கனவே, மியான்மர், தாய்லாந்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 2,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
News March 30, 2025
நண்பன் மனைவியிடம் பழக்கம்.. RCB ரசிகர் கொலை

சென்னையில், CSK தோல்வியை கிண்டல் செய்த RCB ரசிகர் ஜீவரத்தினத்தை, சக நண்பர்களே அடித்துக் கொன்றதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில், பெண் விவகாரத்தில் நடந்த கொலை என தெரியவந்துள்ளது. நண்பன் அப்புவின் மனைவியிடம் ஜீவரத்தினம் பழகி வந்திருக்கிறார். இதை அறிந்த அப்பு, ஜீவரத்தினத்தை RCB வெற்றியை கொண்டாடுவதுபோல் வரவழைத்து நண்பர்கள் உதவியுடன் கொலை செய்துள்ளார்.
News March 30, 2025
ஏடிஎம் கட்டண உயர்வால் ஏழைகளுக்கு நெருக்கடி: CM

ATM பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏடிஎம் மையங்களில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை ₹23ஆக உயர்த்துவது மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். மேலும், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏழைகள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.