News March 25, 2025
காமராஜர் கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு சலுகை

புதுவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் திருமுருகன், “குடிசை மாற்று வாரியம் மூலம் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தில் Phase I to Phase VI வரை உள்ள பயனாளிகள் வீடுகட்ட தவறியவர்கள் & வீடுகட்டி முடிக்கப்படாத பயனாளிகளிடமிருந்து அசல் தொகையை மட்டும் பெற்று கொண்டு அவர்களது அசல் பாத்திரங்களை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 8,638 குடும்பங்கள் பயன் பெறும்,” என்றார்.
Similar News
News March 29, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இளைஞர்களை குறி வைத்து, நீங்கள் குழந்தைகளுடைய ஆபாச படம் பார்த்து உள்ளீர்கள் அல்லது பதிவிறக்கம் (download) செய்துள்ளீர்கள் குழந்தைகள் சம்பந்தமான ஆபாச படங்களை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளீர்கள், என கூறி மிரட்டினால் நம்ப வேண்டாம் என புதுவை காவல்துறை எச்சரித்துள்ளனர். உடனே நண்பர்களுக்கும் Share பண்ணீடுங்க.. Share It
News March 29, 2025
வதந்தியை நம்பி திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்

இன்று வாக்கிய பஞ்சாங்கம் படி திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி நடைபெறாது சனிக்கிழமை வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் மற்றபடி சனிப்பெயர்ச்சி பூஜைகள் நடைபெறாது என திருநள்ளாறு கோயில் நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. ஆனால் திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று நடப்பதாக வந்த வதந்தியை நம்பி திருநள்ளாறில் ஏராளமான பக்தர்கள் கூடி ஏமாற்றம் அடைந்தனர். இதுபோல் யாரும் ஏமாறாமல் இருக்க SHARE செய்யவும்..
News March 29, 2025
யுகாதி வாழ்த்து தெரிவித்த புதுவை முதலமைச்சர்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களால் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படும் இந்த யுகாதி பண்டிகை, புதிய தொடக்கத்தையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் வழங்குவதாக அமையட்டும், எனக் கூறி மேலும் புதுச்சேரி மக்களுக்கு தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு யுகாதி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.