News March 25, 2025
கூலிப்படையை ஏவி கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி

உ.பி. மீரட்டில் காதலனுடன் சேர்ந்து கணவரை பெண் கொலை செய்த வழக்கின் பரபரப்பு அடங்குவதற்குள், அதே போன்ற மற்றொரு சம்பவம் அதே மாநிலத்தில் நடந்துள்ளது. ஆரையா நகரில் திருமணமாகி 15 நாட்களே ஆன நிலையில் கணவர் திலீப்பை கொலை செய்த மனைவி பிரகதி, காதலருடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்கு முன்பே வேறொருவரை காதலித்து வந்த அவர், ரூ.2 லட்சம் கொடுத்து கூலிப்படை மூலம் கணவனை தீர்த்துக் கட்டியுள்ளார்.
Similar News
News March 29, 2025
இந்திய பணக்காரர்களிடம் ₹98 லட்சம் கோடி உள்ளது

2014ல் 70ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 284ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ₹98 லட்சம் கோடியாக உள்ளது. ₹1 லட்சம் கோடி சரிவை சந்தித்த போதிலும், ₹8.6 லட்சம் கோடியுடன் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் அதானியின் நிகர சொத்து மதிப்பு 13% அதிகரித்துள்ளது. ₹3.5 லட்சம் கோடியுடன், டாப் 10ல் இடம்பிடித்த முதல் பெண்மணியாக ரோஷினி நாடார் உள்ளார்.
News March 29, 2025
மார்ச் 29: வரலாற்றில் இன்று

*1849 – பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது. *1857 – கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே, பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். *1999 – உத்தரப் பிரதேசம், சமோலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர். *2007 – கணிதத்தின் நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
News March 29, 2025
17 வருட போராட்டம்.. பழிதீர்த்த RCB

CSK அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி, தனது 17 வருட கனவை RCB நிறைவேற்றியுள்ளது. கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் CSK அணி, RCB அணியுடன் தோற்றது. அதன் பிறகு நடந்த எந்த போட்டியிலும் RCB அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், 17 வருடம் கழித்து நேற்று நடந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் RCB வெற்றி பெற்றுள்ளது.