News March 25, 2025
6 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கேளையாப்பிள்ளையூர் கிராமத்தில், தங்கள் முன்னோர்கள் கூறியதற்கு இணங்க கடந்த 6 தலைமுறைகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாடாமல் உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், தை மாதம் மூன்றாம் வாரத்தில் உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து தாங்கள் கொண்டாடுவதாகவும், வீடுகளுக்கு முன் பொங்கல் வைப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News January 7, 2026
தென்காசி: நாய்களை வைத்து வேட்டையாடிய நபர்கள்

ஆய்க்குடி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தில் தோட்டத்தில் நாய்களை வைத்து வேட்டையாட முயற்சித்த போது (ஜனவரி.07) இன்று சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டனர். அவர்கள் மாவட்ட வன அலுவலர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு தங்களின் தவறை ஒப்புக்கொண்டதால் மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன், அவர்களுக்கு ரூ.1,10,000 இணக்க கட்டணம் விதித்து எச்சரித்து அனுப்பினார்.
News January 7, 2026
தென்காசி: இடம் வாங்க ரூ.5 லட்சம் பெறலாம் – APPLY

தென்காசி மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் உள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது தென்காசி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க
News January 7, 2026
தென்காசி : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது இங்கே <


