News March 25, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (மார்ச் 26) காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது94990 55943, 0424-2275860 என்ற எண்களை தொடர்பு கொண்டு கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும்.

Similar News

News August 16, 2025

ஈரோட்டில் இலவச Tally பயிற்சி!

image

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 16, 2025

புளியம்பட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை

image

புஞ்சைப் புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி, சுப்பிரமணியர் கோவிலில், கால பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலபைரவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News August 16, 2025

ஈரோடு: 500 அரசு உதவியாளர் வேலை: நாளையே கடைசி

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.22405 முதல் ரூ.62265 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நாளை ஆக.17க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். ஈரோடு மக்களே வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!