News March 25, 2025
மாநகராட்சியாக உருவெடுக்கும் பெரம்பலூர்

தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் கே என் நேரு பெரம்பலூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும், நகராட்சிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
Similar News
News July 6, 2025
பெரம்பலூர்: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்?

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News July 6, 2025
பெரம்பலூர்: ரூ.85,000 சம்பளத்தில் வங்கியில் வேலை

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட (1007) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920 வரை வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News July 6, 2025
பெரம்பலூர் மக்களே இதை தெரிந்துகொள்ளுங்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள், தாலுகா, நகராட்சி உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
4 தாலுகா
▶️பெரம்பலூர்
▶️வேப்பந்தட்டை
▶️குன்னம்
▶️ஆலத்தூர்
2 சட்டமன்ற தொகுதிகள்
▶️பெரம்பலூர் (தனி)
▶️குன்னம்
ஒரு நகராட்சி
▶️பெரம்பலூர்
4 பேரூராட்சிகள்
▶️அரும்பாவூர்
▶️குரும்பலூர்
▶️இலப்பைக்குடிகாடு
▶️பூலாம்பாடி. ஷேர் பண்ணுங்க!