News March 25, 2025

BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்

image

தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அதன்படி, பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. மேலும், நகராட்சிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Similar News

News March 31, 2025

வாழ்வை சிறப்பாகும் 20-20-20 Rule தெரியுமா?

image

காலை எழுந்ததும் முதல் 1 மணி 20-20-20 என்ற ரூலின் படி, செய்யும் சில வேலைகள் வாழ்க்கையே மாற்றும் என்கின்றார், The Power of 5 AM புத்தகத்தை எழுதிய ராபின் ஷர்மா. முதல் 20 நிமிடங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். 2வது 20 நிமிடங்களில் தியானம் பண்ணனும். 3வது 20 நிமிடங்களில் ஊக்கம் அளிக்க கூடிய புத்தகத்தை படிக்கவோ, Podcast கேட்கவோ சொல்கிறார். இதனை 21 நாள்கள் செய்து தான் பாருங்களேன்?

News March 31, 2025

இதுவல்லவோ உண்மையான வெற்றி! ❤️❤️

image

CSKக்கு எதிரான நேற்றைய போட்டியில் RR மெகா வெற்றியை பதிவு செய்தது. ரியான் பராக் கேப்டன்சியில் பெரும் முதல் வெற்றியும் இதுதான். இந்த சூழலில், சிறுவயது பராக், தோனியுடன் எடுத்துக் கொண்ட போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட காரணமாக இருந்த ஒருவரின் அணியை வீழ்த்துவதை விட உண்மையான வெற்றி என்ன இருந்துவிட போகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News March 31, 2025

எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக புதிய நெருக்கடி?

image

ஏப்.6-ஆம் தேதி தமிழகம் வரும் PM மோடியை சந்திக்க இபிஎஸ்க்கு BJP நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட OPS,TTV, சசிகலா ஆகியோரை மீண்டும் இணைக்க வேண்டும், அண்ணாமலை தலைமையிலான பாஜகவை ஏற்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம். இதனால், தனது நலன் விரும்பிகளுடன் விரைவில் ஆசோசனை நடத்த EPS திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!