News April 2, 2024
கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டம்: புதிய நடைமுறை அமல்

தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ₹14,000 நிதியுதவி, இனி 3 தவணைகளில் வழங்கப்பட உள்ளது. கா்ப்ப காலத்தின் 4ஆவது மாதத்தில் ₹6,000, குழந்தை பிறந்த 4ஆவது மாதத்தில் ₹6,000, குழந்தை பிறந்த 9ஆவது மாதத்தில் ₹2,000 ஆக வழங்கப்படவுள்ளன. மேலும், பேறு காலத்தில் 3 மற்றும் 6ஆவது மாதங்களில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும்.
Similar News
News October 31, 2025
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி புகார் அளித்த ஜாய் கிரிசில்டாவிற்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மாதம் ₹6.50 லட்சம் பராமரிப்பு தொகை கேட்டு ஜாய் நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. ரங்கராஜுக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 31, 2025
INDIA – USA: 10 ஆண்டு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

ADMM-Plus மாநாட்டில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர், USA-வின் போர் செயலர் பீட் ஹெக்செத்தை சந்தித்து பேசினார். அப்போது, INDIA -USA இடையே 10 ஆண்டுகளுக்கான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து கூறிய ஹெக்செத், இந்தியாவுடனான உறவு மிகவும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 2 நாடுகள் இடையே தகவல் & தொழில்நுட்ப பரிமாற்றம் அதிகமாகும்.
News October 31, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

CM ஸ்டாலின் ஆகஸ்ட் 12-ல் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் நவம்பர் முதல் வாரத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். இனி, ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.


