News March 25, 2025
ATM சேவை கட்டணத்தை உயர்த்த RBI அனுமதி

ATMகளில் வங்கிகள் இடையேயான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த RBI அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கியின் ATMல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ₹17ல் இருந்து, ₹2 அதிகரிக்கப்பட்டு ₹19ஆக நிர்ணயிக்க வங்கிகளுக்கு RBI ஒப்புதல் அளித்துள்ளது. ரொக்கம் அல்லாத ATM பரிவர்த்தனைகளான மினிமம் பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு ₹6ல் இருந்து ₹7ஆக கட்டணம் உயருகிறது.
Similar News
News August 11, 2025
கனமழை வெளுக்கும்.. கவனமா இருங்க மக்களே!

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தஞ்சை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை சென்னை, செ.பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!
News August 11, 2025
தோனி வாக்குமூலம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

₹100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞரை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. IPL சூதாட்ட வழக்கு தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்து கூறியதாக IPS அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியாவுக்கு எதிராக 2014-ல் தோனி வழக்கு தொடர்ந்திருந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், நீதிபதி CV கார்த்திகேயன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
News August 11, 2025
கர்நாடகா அமைச்சர் ராஜினாமா? இதுதான் காரணம்!

கர்நாடக அமைச்சர் ராஜண்ணா <<17370523>>ராஜினாமா<<>> செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின் ‘வாக்குத்திருட்டு’ போராட்டம் பற்றி பேசிய அவர், மஹாதேவ்புராவில் நடந்த சம்பவம் மாநிலத்தில் காங்., ஆட்சியில் இருக்கும்போதே நடந்துள்ளது. நம் கண்முன்னே இந்த முறைகேடு நடந்துள்ளதற்கு கட்சி வெட்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். அவரை பதவி விலகச் சொல்லி காங்., மேலிடத்தில் இருந்து அழுத்தம் வர, இந்தப் பேச்சு தான் காரணமாம்.