News March 25, 2025
வேலூர் அருகே பிளஸ்-1 மாணவன் தற்கொலை

குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த ரஜினியின் மகன் லிங்கேஸ்வரன்(17). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த லிங்கேஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 31, 2025
வேலூர்: செல்போனால் வந்த வினை – மாணவி விபரீத முடிவு!

வேலூர்: தார்வழி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் பிரியாமணி (17). அரியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் வீட்டில் செல்போனை அதிகநேரம் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 31, 2025
வேலூர்: ஒரே ஆண்டில் ரூ.19 கோடி மோசடி!

வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நடப்பு ஆண்டில் ஆன்லைன் மோசடி தொடர்பாக 3,150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 519 மனுக்கள் பணம் இழப்பு இல்லாத மனுக்கள் ஆகும். மீதமுள்ள 2,631 பேர் ரூ.19 கோடியே 41 லட்சத்தை இழந்துள்ளனர். இதில் பல வங்கி கணக்குகளில் உள்ள 4 கோடியே 18 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரம் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூரில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரவு 10 முதல் காலை 6 மணி வரை வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.30) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதை இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


