News March 25, 2025

வேலூர் அருகே பிளஸ்-1 மாணவன் தற்கொலை

image

குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த ரஜினியின் மகன் லிங்கேஸ்வரன்(17). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த லிங்கேஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 12, 2026

வேலூர்: இனி ஆதார் வாங்க, HI போடுங்க!

image

வேலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

பொங்கல் பண்டிகையால் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன. வேலூர்–நாகர்கோவில் ரூ.3,600, வேலூர்–நெல்லை ரூ.3,500 என வசூலிக்கப்படுகிறது. வழக்கத்தை விட அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசு உடனடி கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

News January 12, 2026

தொரப்பாடி சிறையில் 25 பேர் பரோல் கேட்டு விண்ணப்பம்

image

பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் இருந்து 25-க்கும் மேற்பட்ட கைதிகள் தற்போது வரை பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பலர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. கைதிகளின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 4 அல்லது 6 நாட்கள் பரோல் வழங்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!