News March 25, 2025

திருப்பூரில் விவசாயிகள் 43 பேர் மீது வழக்கு

image

பஞ்சாப் மாநிலத்தில் விவசாய சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தைச் சேர்ந்த 43 பேர் மீது திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News January 16, 2026

திருப்பூர்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

News January 16, 2026

திருப்பூர்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே<> கிளிக்<<>> செய்து பதிவு செய்யுங்கள். அதிகம் ஷேர் பண்ணுங்க!

News January 16, 2026

திருப்பூர் மக்களே எச்சரிக்கை!

image

திருப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் உறைபனி காரணமாக, பொதுமக்கள் அனைவரும் குடிநீரைக் காய்ச்சிப் பருக வேண்டுமென மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பனிப்பொழிவால் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் முன்னெச்சரிக்கையாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகளிலும் பொது இடங்களிலும் சுகாதாரத்தைப் பேணிக் காக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!