News April 2, 2024

பொய் பேசுவதில் முதல்வருக்கு நோபல் பரிசு தரலாம்

image

முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் தோல்வி பயத்தில் உள்ளதாக இபிஎஸ் கூறியுள்ளார். சோளிங்கரில் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், “3 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு திமுக செய்தது என்ன?. ரூ.3 லட்சம் கோடி கடன் மட்டுமே அரசு வாங்கியுள்ளது. விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அறிவித்தால், அது முதல்வர் ஸ்டாலினுக்கு தான் கிடைக்கும்” என்றார்.

Similar News

News January 23, 2026

தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள்.. புதிய தகவல்

image

தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருந்து விருத்தாசலம், தி.மலையில் இருந்து செய்யாறு, கோவையில் இருந்து பொள்ளாச்சி, சேலத்தில் இருந்து ஆத்தூர், தஞ்சையில் இருந்து கும்பகோணம் ஆகிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு குடியரசு தினத்தன்று (ஜன.26) வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News January 23, 2026

சட்டப்பேரவையில் உதயகுமார் Vs ரகுபதி வார்த்தை போர்

image

சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து EX அமைச்சர் உதயகுமார் மற்றும் அமைச்சர் ரகுபதி இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், நிரந்தர டிஜிபி இல்லாததால் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் உதயகுமார் குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, இந்தியாவிலேயே குற்ற சம்பவம் குறைவாக நடப்பது தமிழகத்தில் தான் என விளக்கமளித்துள்ளார்.

News January 23, 2026

குழந்தைகள் வாயில் நிப்பிள் வைக்குறீங்களா? ALERT!

image

பெற்றோர்களே, உங்கள் குழந்தை அழுதுகொண்டே இருப்பதால் அவர்கள் வாயில் pacifer அல்லது fruit nibbler-களை வைக்குறீங்களா. இது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நிப்பிள் வைக்கும்போது மிக மிக அரிதாக குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். இதனால் ஒரு வயது வரை உங்கள் குழந்தைக்கு இதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்கின்றனர். SHARE.

error: Content is protected !!