News March 25, 2025

கோர விபத்தில் கல்லூரி மாணவர் பலி

image

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை அடுத்த ரெட்டியார்பட்டி அருகே நேற்று மாலை நான்கு வழி சாலையில் இருசக்கர வாகனம், கார், லாரி ஆகியவை ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 16, 2025

தொடர் கனமழை.. நெல்லை ஆணையர் அறிவுறுத்தல்

image

பருவமழைகால முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கவும், போர்க்கால அடிப்படையில், பணிகளை மேற்கொள்ளவும் திருநெல்வேலி மாநகராட்சியில் சுகாதார அலுவலர்கள், உதவி செயற் பொறியாளர்கள் தலைமையின் கீழ் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் டாக்டர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார். மாநகரமக்கள் எந்த நேரமும் மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

News October 16, 2025

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

image

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி, நீர் இருப்பு : 84 அடி, நீர் வரத்து : 135.97 கனஅடி வெளியேற்றம் : 350 கன அடி; சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி, நீர் இருப்பு : 96.98 அடி, நீர்வரத்து : NIL, வெளியேற்றம் : NIL; மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118, நீர் இருப்பு : 92.11 அடி, நீர் வரத்து : 201.29 கனஅடி, வெளியேற்றம் : 30 கனஅடி; வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50 அடி, நீர் இருப்பு: 11 அடி.

News October 16, 2025

BREAKING: நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பாளை, சேரன்மகாதேவி வட்டாரங்களில் கனத்த மழை பெய்கிறது. இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று (16.10.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு இரா.சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!