News March 25, 2025
முகம் பளிச்சிட இதை ட்ரை பண்ணலாமே…

✦மசித்த பப்பாளி மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து சுமார் 15 – 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ சருமம் பொலிவாகும். ✦கடலை மாவை தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் முகம் கழுவ முகம் பளிச்சிடும். ✦மசித்த வாழைப்பழம், தேன் மற்றும் பால் கலந்து பேஸ் மாஸ்க் போட நல்ல பலன் கிடைக்கும்.
Similar News
News March 29, 2025
3 பேர் உயிரிழப்பு: ஆட்டோ – லாரி மோதி கோர விபத்து

மதுரை திருமங்கலம் அருகே ஆட்டோவும் லாரியும் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.தொட்டியபட்டி பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 3 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீஸ், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
News March 29, 2025
நீட் தேர்வு மாணவர் கொல்லி: அன்புமணி

நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட 2வது மாணவி தர்ஷினி என x தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்க நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 29, 2025
வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

ரம்ஜான் தினமான மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் திறந்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி கணக்குகள் முடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அதே தினத்தில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், வங்கிகள் விடுமுறையின்றி செயல்பட்டு கணக்குகளை முடிக்க வேண்டும் என்று RBI உத்தரவிட்டுள்ளது.