News April 2, 2024
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார்

தேர்தல் பிரசாரங்களில், நல்லிணக்கத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பேசுவதாக அமைச்சர் உதயநிதி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் மீது அவதூறு வார்த்தைகளை கூறுவது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கூடாது என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
சற்றுமுன்: லெஜண்ட் காலமானார்

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் (கோல்கீப்பர்) மானுவல் ஃபிரடெரிக் (78) காலமானார். உள்ளூர் போட்டிகளில் ஜொலித்த ஃபிரடெரிக், 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். இவர்தான் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் கேரள மாநிலத்தவர். 2019-ம் ஆண்டு, விளையாட்டுக்கான அவரது பங்களிப்புக்காக தியான் சந்த் ( Dhyan Chand) Award வழங்கப்பட்டது.
News October 31, 2025
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி புகார் அளித்த ஜாய் கிரிசில்டாவிற்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மாதம் ₹6.50 லட்சம் பராமரிப்பு தொகை கேட்டு ஜாய் நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. ரங்கராஜுக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 31, 2025
INDIA – USA: 10 ஆண்டு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

ADMM-Plus மாநாட்டில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர், USA-வின் போர் செயலர் பீட் ஹெக்செத்தை சந்தித்து பேசினார். அப்போது, INDIA -USA இடையே 10 ஆண்டுகளுக்கான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து கூறிய ஹெக்செத், இந்தியாவுடனான உறவு மிகவும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 2 நாடுகள் இடையே தகவல் & தொழில்நுட்ப பரிமாற்றம் அதிகமாகும்.


