News March 24, 2025
மும்மொழியை ஏன் எதிர்க்கிறோம்-தூத்துக்குடி எம்பி விளக்கம்

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயாக்களில் தமிழ் கற்றுக் கொடுக்க நிரந்தர ஆசிரியர்கள் 0, ஹிந்திக்கு 86, சமஸ்கிருதத்துக்கு 65 பேர் உள்ளனர் என மத்திய அரசு கூறுகிறது. இப்படி இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதை தான் காலம் காலமாக திமுக எதிர்க்கிறது” என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 17, 2025
11 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 11துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், புதூர் ஊராட்சி ஒன்றியம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த 11 பேரை நேற்று இடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News April 17, 2025
வேளாண் அடுக்கு திட்டத்தின் கால அவகாசம் நீடிப்பு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட வேளான் இணை இயக்குனர் பெரியசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் நில விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்யும் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 42,000 விவசாயிகள் இன்னும் பதிவு செய்யாமல் இருப்பதால் இதற்கான காலக்கெடுவை ஏப்.30 வரை நீட்டித்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
வேளாண் அடுக்கு திட்டத்தின் கால அவகாசம் நீடிப்பு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட வேளான் இணை இயக்குனர் பெரியசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் நில விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்யும் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 42 ஆயிரம் விவசாயிகள் இன்னும் பதிவு செய்யாமல் இருப்பதால் இதற்கான காலக்கெடுவை ஏப்.30 வரை நீட்டித்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.